மதுரையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போன்று நடித்து, லஞ்ச ஒழிப்பு ஆய்வாளரை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
சிலைமலைப்பட்டி வி.ஏ.ஓ- ஆன முத்துக்காளை மீது லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தல்லாக்குளத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்ற முத்துக்காளையின் நண்பர் முத்துகிருஷ்ணன், தான் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக கூறி வி.ஏ.ஓ முத்துக்காளை மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு ஆய்வாளர் சூர்ய கலாவை நிர்பந்தித்துள்ளார்.
சந்தேகமடைந்த சூர்ய கலா, துறை சார்ந்து பல கேள்விகளை எழுப்பி முத்துக்கிருஷ்ணன் ஒரு போலி என்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்