தஞ்சையில் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நடுக்காவேரி பகுதியை சேர்ந்த கமலநாதன்,ஜெயலட்சுமி தம்பதி, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை மேம்பாலத்தில் சென்ற போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து இவர்களது பைக்கை முந்தி செல்ல முயன்றதில், பக்கவாட்டில் உரசியுள்ளது.
இதில் பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஜெயலட்சுமி மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.