​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சத்யஸ்ரீ கொலை வழக்கு : ஆதாரங்களை திரட்டும் சிபிசிஐடி போலீசார்

Published : Oct 18, 2022 1:08 PM

சத்யஸ்ரீ கொலை வழக்கு : ஆதாரங்களை திரட்டும் சிபிசிஐடி போலீசார்

Oct 18, 2022 1:08 PM

சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆலந்தூரில் உள்ள சத்யாவின் வீட்டில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கொலையாளி சதீஷ் பின்தொடர்ந்து வந்து திட்டமிட்டு கொலை செய்தது தொடர்பாக ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட போது ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே போலீசார், கேண்டின் ஊழியர்கள் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.