​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நள்ளிரவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்,,, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published : Oct 18, 2022 1:02 PM

நள்ளிரவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்,,, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Oct 18, 2022 1:02 PM

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், நள்ளிரவில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

அங்குள்ள ஹெர்மன் பகுதியில் 5 தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த தகர கொட்டகையில், நள்ளிரவில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியுள்ளனர். இதில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

சம்பவத்தை அடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், கையெறி குண்டுகளை வீசிய லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இம்ரான் பஷீர் கனி என்பவனை கைது செய்தனர்.