விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்த சங்கரபாண்டியன், ஜோதிமணி கடந்த ஜுலை 18ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலையை எதிர் வீட்டில் வசித்து வந்த சங்கர் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இக்கொலைக்கு அவரது மனைவி பொன்மணி உடந்தையாக இருந்துள்ளார்.
சங்கர் கடன் கேட்டதற்கு தர மறுத்த சங்கர பாண்டியனையும் அவரது மனைவியையும் கொலை செய்துவிட்டு பணம், நகைகளை கொள்ளையடித்ததை சங்கர் ஒத்துக் கொண்டதையடுத்து கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.