மதுரையில் நாய் குறுக்கே வந்ததால் வேகமாகச் சென்ற பயணிகள் ஆட்டோ, கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
செல்லூரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர், தமது ஆட்டோவில் பயணிகளுடன் வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே வந்ததை கண்ட ராஜேஷ் கண்ணன் பிரேக் அடித்த நிலையில், ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் காயமடைந்தனர்.