சென்னை அடுத்த அம்பத்தூரில் நள்ளிரவில் செயல்பட்டு வந்த உணவகத்தை மூடுமாறு கூறி தகராறில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அம்பத்தூர்-செங்குன்றம் சாலை ஓரகடம் பகுதியில் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ரோந்துப் பணியில் இருந்த அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் தசரதன், உணவகத்தை மூடக்கோரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடை உரிமையாளர் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு டுவிட்டரில் அளித்த புகாரின்பேரில், தசரதனை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டார்.