​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரொட்டி தர மறுத்த வியாபாரி அடித்துக்கொலை - சிறுவன் உள்பட 2 பேர் கைது

Published : Oct 18, 2022 6:43 AM

ரொட்டி தர மறுத்த வியாபாரி அடித்துக்கொலை - சிறுவன் உள்பட 2 பேர் கைது

Oct 18, 2022 6:43 AM

தேனி மாவட்டம் கம்பத்தில் ரொட்டி தரமறுத்த வியாபாரியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

பாரதியார் நகரை சேர்ந்த சுருளிவேலு என்பவர் மூன்று சக்கர சைக்கிளில் ரொட்டி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று கம்பமெட்டு காலனிபகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அவரிடம், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் 10 ரூபாய்க்கு 3 பன்ரொட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மழையால் மின் தடை ஏற்பட்டதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இருவரும், அப்பகுதியில் கிடந்த மரக்கட்டையை எடுத்து சுருளிவேலுவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். சம்பவ இடத்தில் கிடந்த செருப்பை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி,  மணிகண்டனையும், சிறுவனையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.