​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

Published : Oct 18, 2022 6:24 AM

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

Oct 18, 2022 6:24 AM

அந்தமானில் 21 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.