எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இந்தாண்டும் தீபாவளி கொண்டாட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டு தீபாவளியன்று, எல்லையில் பாதுகாப்புப் பணியில் உள்ள வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடும் முன், வரும் 21ஆம் தேதியன்று உத்தரகாண்டின் கேதர்நாத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது. தொடர்ந்து கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் பிரதமர் தரிசிக்க உள்ளார்.