​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூடுவாஞ்சேரி: இறந்தவர் பெயரில் திமுக கவுன்சிலர் நடத்திய வந்த பட்டாசு கடைக்கு சீல்..!

Published : Oct 17, 2022 7:05 PM

கூடுவாஞ்சேரி: இறந்தவர் பெயரில் திமுக கவுன்சிலர் நடத்திய வந்த பட்டாசு கடைக்கு சீல்..!

Oct 17, 2022 7:05 PM

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் தர்காஸ் பகுதியில் திமுக கவுன்சிலரின் பட்டாசுக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அங்குள்ள ஒன்றிய கவுன்சிலர் பெருமாட்டுநல்லூர் ரவி தனது உறவினரான ஓய்வு பெற்ற விஏஓ சேகர் என்பவரது பெயரில் பட்டாசுக்கடை நடத்திவந்ததாக கூறப்படுகின்றது.

அண்மையில் சேகர் உயிரிழந்த நிலையில் அதனை மறைத்து மீண்டும் இந்த தீபாவளிக்கு தேவையான பட்டாசுக்களை விற்பனை செய்து வந்த நிலையில், இறந்தவர் பெயரில் பட்டாசுக்கடைக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது?  என்று புகார் எழுந்தது.

அங்கு ஆய்வு மேற்கொண்ட செங்கல்பட்டு வட்டாட்சியர், உரிமம் இல்லாத அந்த பட்டாசுக்கடையை இழுத்து பூட்டி சீல் வைத்தார்.