வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், தரையில் அமர்ந்து அவருடைய கோரிக்கையை.
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கேட்டார்.
ஓதியத்தூர் மலை கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, மனு அளிக்க வந்த இடத்தில், திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
தந்தை பெயரில் உள்ள வீட்டுமனை நிலத்தை. குறைவான அளவு காண்பித்து பட்டா வழங்கியிருப்பதாகவும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய உத்தரவிட்டு, ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.