​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கில் 2ஆம் நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

Published : Oct 17, 2022 6:28 PM

சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கில் 2ஆம் நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

Oct 17, 2022 6:28 PM

சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது தாய், அவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே கொலையாளி சதீசால், சத்யஸ்ரீ மிரட்டப்பட்ட நிலையில், அது குறித்து காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் ஆவணங்களை பெற்று, நேற்று சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சத்யஸ்ரீ கொல்லப்பட்ட பரங்கிமலை ரயில் நிலையத்தில் சம்பவம் நிகழ்ந்தபோது பணியில் இருந்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.