​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரியர் நிறுவன குடோனின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை..!

Published : Oct 17, 2022 5:54 PM

கொரியர் நிறுவன குடோனின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை..!

Oct 17, 2022 5:54 PM

ஆம்பூர் அருகே, கொரியர் நிறுவன குடோனின் சுவற்றில் துளையிட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிந்தாபுரம் பகுதியில், ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து வரும் பார்சல்களை டெலிவரி செய்யும் கொரியர் ஏஜென்சியின் குடோன் உள்ளது.

இன்று காலை ஊழியர்கள் அலுவலகத்தை திறக்க வந்தபோது, சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

சிசிடிவி பதிவுகளை வைத்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.