தமிழ்நாட்டில் இன்னும் பல பள்ளி- கோவில்கள் உள்ளிட்ட இடங்களில், பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அரிஜன் சேவா சங்கத்தின் 90ம் ஆண்டு நிகழ்வில் பேசிய அவர், பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர், தண்டனைகளில் இருந்து தப்பிவிடுவதாகவும், அவர்கள் தண்டிக்கப்படாததே குற்றங்கள் தொடர காரணமாக உள்ளதாகவும் கூறினார்.