மதுரை பாலமேடு அருகே ஸ்ரீ சாத்தா மலைக்கோயிலில் மழை பொழியவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற அசைவ உணவு படையல் திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ சாத்தா கோயிலில் வேண்டுதல் வைத்து, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆடு, கோழியை நேர்த்திக்கடனாக வழங்கி சாமிக்கு படையலிடுவது வழக்கம். திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பின்னர் அசைவ உணவு வழங்கப்பட்டது.