​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியே செல்லும் பெண்களுக்கு லிப்ட் தந்து பாலியல் வன்புணர்வு,நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

Published : Oct 17, 2022 3:00 PM

தனியே செல்லும் பெண்களுக்கு லிப்ட் தந்து பாலியல் வன்புணர்வு,நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

Oct 17, 2022 3:00 PM

ஸ்ரீபெரும்புதூர் அருகே  பெண்களுக்கு லிஃப்ட் தருவது போல காரில் ஏற்றி சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்ததாக  இளைஞரை ஓரகடம் போலீசார் கைது செய்தனர்.

குண்ணவாக்கத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர்,  வேலைக்கு செல்வதற்காக  பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, காரில் வந்த  இளைஞர் லிப்ட் கொடுத்து  ஏற்று சென்று, கத்தியை காட்டி வன்புணர்வு செய்து, 4 கிராம் நகைகளை பறித்துவிட்டு ஆளில்லாத இடத்தில் இறக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  ஏகனாம்பேட்டையை சேர்ந்த 32 வயது பெண்ணும் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார்,  கூடுவாஞ்சேரி அருகே உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த சதாம்  உசேனை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.