​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலவசமாக ரொட்டி தராததால் வியாபாரியை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள்..!

Published : Oct 17, 2022 2:33 PM

இலவசமாக ரொட்டி தராததால் வியாபாரியை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள்..!

Oct 17, 2022 2:33 PM

தேனி மாவட்டம் கம்பத்தில் இலவசாமாக ரொட்டி தராததால் ரொட்டி வியாபாரியை கட்டையால் தாக்கி கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கம்பம் பகுதியை சேர்ந்த சுருளி வேல்  மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இவர் சைக்கிள் மூலம், ரொட்டி கேக் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

நேற்று கம்பம் மேட்டு காலனி பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அவரிடம் ரொட்டியை இலவசமாக கேட்டு தகராறு செய்த சிலர், சுருளி வேல் ரொட்டி தராததால், அவரை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.