சேலத்தில் அதிவேகமாக இரு சக்கரவாகனம் ஓட்டிச் சென்றதை தட்டிக்கேட்ட பெண்ணை காவலர் மகன் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
அங்குள்ள பெரியார் மேம்பாலத்தில், 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைக்கை தாறுமாறாக ஓட்டிச்சென்றதை பார்த்து, இரு சக்கரவாகனத்தில் சென்ற நக்மா என்ற பெண் தட்டிக்கேட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால் சிறுவன் அந்த பெண்ணை தாக்கி உள்ளான். பதிலுக்கு அப்பெண், சிறுவனை செருப்பால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
விசாரணையில் அந்த சிருவனின் தந்தை காவலராக பணியாற்றுவது தெரியவந்தது. சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு சிறுவனை அழைத்து சென்று பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து எச்சரித்து அனுப்பி வைத்