நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனம் மற்றும் மிதிவண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளியூரை சேர்ந்த ராமசாமி காற்றாலை பண்ணையில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று அதிகாலை அவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரின் இருசக்கர வாகனம், அவரின் சகோதரரின் இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மிதிவண்டியை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.