​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் - சபாநாயகர் அப்பாவு

Published : Oct 17, 2022 12:34 PM

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் - சபாநாயகர் அப்பாவு

Oct 17, 2022 12:34 PM

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நாளை தாக்கல் செய்யப்பட இருப்பதாக  சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடுதல் செலவீனத்துக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் நாளை தாக்கல் செய்ய இருப்பதாக  கூறினார்.