​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுவன் கொலை வழக்கில் 48 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது.. குற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் ஜானிக்கு சல்யூட்..!

Published : Oct 17, 2022 9:11 AM



சிறுவன் கொலை வழக்கில் 48 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது.. குற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் ஜானிக்கு சல்யூட்..!

Oct 17, 2022 9:11 AM

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொலை வழக்கில் 48 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவிய போலீஸ் நாய் ஜானிக்கு காஸ்கஞ்ச் காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கொலை செய்து புதைத்துவிட்டு அவனிடமிருந்த டிராக்டர் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை மோப்ப நாய் ஜானியின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

மேலும் 22 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டிராக்டரும் மீட்கப்பட்டது.