சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் கால் தொடையில் எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமுல்லைவாயலில் இயங்கி வரும் ஜி.கே ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் குழந்தை ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று முன்தினம் அந்த குழந்தை பள்ளியில் உள்ள கழிவறைக்கு செல்லும்போது விழுந்து காயம் அடைந்துள்ளதாக நிர்வாகத்தினர் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து மாணவி காயம் அடைந்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.