புதுச்சேரி யூனியன் வில்லியனூர் அருகே இயங்கி வரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நெய் பாட்டில்களை பெண்கள் திருடும் சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அருமாத்தபுரம் பகுதியில் உள்ள அந்த தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு நேற்று இரவு 2 பெண்கள் சென்றுள்ளனர்.
இருவரும் கடைக்குள் நுழைந்து நெய் பாட்டில்கள் உள்ள பகுதிக்கு சென்று அங்கிருந்த 5 விலை உயர்ந்த நெய் பாட்டில்களை சேலைக்குள் வைத்து மறைத்து எடுத்துச் சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது.