தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அந்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளில் பலத்த மழையால் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.