​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி நகைகளை அடகு வைக்க முயன்ற நபர் கைது: தப்பி ஓடிய பெண்ணை பிடிக்கும் பணி தீவிரம்

Published : Oct 17, 2022 6:41 AM



போலி நகைகளை அடகு வைக்க முயன்ற நபர் கைது: தப்பி ஓடிய பெண்ணை பிடிக்கும் பணி தீவிரம்

Oct 17, 2022 6:41 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலி நகைகளை அடகு வைக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரைச் சேர்ந்த தவ்ஷிக் மற்றும் சிம்ரன் ஆகியோர் ஆம்பூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் நகை அடகு கடை ஒன்றில் நகைகளை அடகு வைப்பதற்காக சென்றுள்ளனர். 

அவர்கள் கொடுத்த நகையை சோதித்த போது அது போலியானது என தெரிய வந்ததால் கடையின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளித்தார்.

இதனைக் கண்ட  இருவரும் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்ற நிலையில் போலீசாரின் சோதனையில் தவ்சிக் மட்டும் சிக்கினார்.  தப்பி ஓடிய சிம்ரனை தேடி வருகின்றனர்.