​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகப் பாம்பை கடித்து கொன்ற நாய்: வளர்த்த குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த செல்லப்பிராணி

Published : Oct 17, 2022 6:36 AM

நாகப் பாம்பை கடித்து கொன்ற நாய்: வளர்த்த குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த செல்லப்பிராணி

Oct 17, 2022 6:36 AM

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப்பாம்பை, அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் கடித்து கொன்ற நிலையில் பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது. 

குறிச்சிப்பட்டியை சேர்ந்த ஜெயபால் என்பவரது வீட்டில்  10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்த நாய், நாகப் பாம்பிடம் கடுமையாக மோதியது. இந்த சண்டையில் பாம்பும், நாயும் ஒரு சேர உயிரிழந்தது.

தன்னை வளர்த்து வந்த குடும்பத்தினரின் உயிரைக் காக்க தனது உயிரை தியாகம் செய்த அந்த செல்லப்பிராணியின் உடலுக்கு பூக்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.