​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published : Oct 17, 2022 6:24 AM

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 17, 2022 6:24 AM

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 95ஆயிரம்  கன அடி  நீர்  காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு இருப்பதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால்,  அணையின் பாதுகாப்பு கருதி, சுரங்க மின் நிலையம் வழியாகவும்,   16 கண் மதகு வழியாகவும்   ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டிருப்பதால், சேலம், ஈரோடு, உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 2-ஆவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.