​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா - மதுபோதையில் தேநீர் கடையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு, 8 பேர் தப்பியோட்டம்..!

Published : Oct 16, 2022 10:01 PM



கஞ்சா - மதுபோதையில் தேநீர் கடையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு, 8 பேர் தப்பியோட்டம்..!

Oct 16, 2022 10:01 PM

மதுரை வலையங்குளத்தில் தேநீர் கடையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவரை, கஞ்சா மற்றும் மதுபோதையில் அரிவாளால் தாக்கிவிட்டு, தப்பியோடிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பேருந்து நிறுத்தம் பகுதியில், சகோதரர்களான திருமன், அழகுராஜா ஆகியோர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர்.

அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், கடைக்கு முன் இடையூறாக பைக் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி, திருமன், அழகுராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், இருவரையும் தாக்கிவிட்டு தப்பியோடினர்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.