​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தை பெற்ற விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விதிமீறல்..? நேரில் அழைத்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை திட்டம்

Published : Oct 16, 2022 7:32 PM

குழந்தை பெற்ற விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விதிமீறல்..? நேரில் அழைத்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை திட்டம்

Oct 16, 2022 7:32 PM

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை அழைத்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாடகைத் தாய் யார்? குழந்தை பிறந்த மருத்துவமனை ஆகியவை கண்டறியப்பட்டதாகவும், இதுவரை சுகாதாரத்துறைக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் எந்த தகவலும் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பதிவுத் திருமணம் செய்ததாக கூறப்படும் தகவலின் உண்மைத்தன்மை குறித்தும் சுகாதாரத்துறை விசாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.