​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையிலிருந்து தாய் - தந்தையை பார்க்க சொந்த ஊர் வந்த நபர் அடித்து கொலை..!

Published : Oct 16, 2022 3:46 PM

மும்பையிலிருந்து தாய் - தந்தையை பார்க்க சொந்த ஊர் வந்த நபர் அடித்து கொலை..!

Oct 16, 2022 3:46 PM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தாய் தந்தையை பார்க்க மும்பையில் இருந்து சொந்த ஊர் வந்த நபர் கொலை செய்யப்பட்டார்.

மும்பையில் வேலை பார்த்த தரடாப்பட்டைச் சேர்ந்த ரவீந்திரன், 3 நாள்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பி வராததால், உறவினர்கள் தேடி வந்தனர்.

அங்குள்ள தோட்ட பகுதியில் கழுத்து தலை பகுதிகளில் ரத்த காயங்களுடன் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சடலமாக கிடந்தார்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.