​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அப்பா, மகன், மருமகன் மூலம் குடும்ப ஆட்சி நடக்கிறது - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் குற்றச்சாட்டு..!

Published : Oct 16, 2022 2:41 PM

தமிழகத்தில் அப்பா, மகன், மருமகன் மூலம் குடும்ப ஆட்சி நடக்கிறது - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் குற்றச்சாட்டு..!

Oct 16, 2022 2:41 PM

தமிழகத்தில் அப்பா , மகன் , மருமகன் மூலம் குடும்ப ஆட்சி நடக்கிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின்  திட்டங்களை பெறுவதற்கான வழிகாட்டுதல் பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய பியூஷ் கோயல்,மத்திய அரசு தரமான அரசியை கொடுத்தாலும், ரேசன் கடைகளில் தரமற்ற அரிசியையே தமிழக அரசு  விநியோகிப்பதாக விமர்சித்தார்.

விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும், பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைய வேண்டும், 3 குடும்பம் மட்டுமல்ல , அனைத்து குடும்பமும் வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.