செங்கல்பட்டில் உள்ள டிஜிட்டல் வங்கியை, காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், திறப்பு விழாவில் மத்திய இணை-அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
டிஜிட்டல் வங்கி நடைமுறையை வலுப்படுத்தும் விதமாக, 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதில் செங்கல்பட்டு வேதாசலம் நகரில் அமைந்துள்ள INDUSIND டிஜிட்டல் வங்கி அலகை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் மத்திய இணை அமைச்சர் முருகன் திறந்து வைத்தார். தொடர்ந்து, பிரதமர் காணொளி மூலம் டிஜிட்டல் வங்கியை திறந்து வைத்தார்.