​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரான் சிறையில் நடந்த மோதலில் சிறைக்குள் தீவைப்பு.. 8 பேர் காயமடைந்ததாக தகவல்..

Published : Oct 16, 2022 1:12 PM

ஈரான் சிறையில் நடந்த மோதலில் சிறைக்குள் தீவைப்பு.. 8 பேர் காயமடைந்ததாக தகவல்..

Oct 16, 2022 1:12 PM

ஈரானில் உள்ள முக்கிய சிறையில் மோதல் நடைபெற்ற நிலையில், அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அரசியல் கைதிகள், வெளிநாட்டு கைதிகள் மற்றும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு திடீரென சிறையில் மோதல் ஏற்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறிய அதிகாரிகள், மோதலில் 8 பேர் காயமடைந்ததாக தெரிவித்தனர்.