சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் மதுபோதையில் கார் ஓட்டி வந்த ஆண் நண்பர் உள்பட இளம்பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்,அந்த வழியாக சென்ற காரினை சோதனை செய்த போது காரில் இருந்த இளம்பெண் மற்றும் காரை ஓட்டி வந்த நபர் குடித்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் இருவரும் இரவு பார்ட்டிக்கு சென்று பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மது அருந்தி வந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் உரிய ஆவணங்களை கேட்டு சரி பார்த்த பிறகு அபராதம் விதித்தனர்.
ஆனால் காரை எடுத்துச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் உடன் வந்த ஆண் நண்பரோடு சண்டையிட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்.