2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை - சாலைகளில் ஆறு போல் ஓடிய வெள்ளம்..!
Published : Oct 16, 2022 7:17 AM
2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை - சாலைகளில் ஆறு போல் ஓடிய வெள்ளம்..!
Oct 16, 2022 7:17 AM
திருச்சியில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடியது.
சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் காரணமாக சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கும் அளவுக்கு மழைநீர் ஓடியது.
கனமழை காரணமாக நகரின் இதய பகுதியாக விளங்கும் சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, தெப்பக்குளம் பகுதிகளில் வாடிக்கையாளர்கள் இல்லாததால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.