​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பயணித்த படகு பாலத்தின் தூணில் மோதி விபத்து!

Published : Oct 16, 2022 6:55 AM



பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பயணித்த படகு பாலத்தின் தூணில் மோதி விபத்து!

Oct 16, 2022 6:55 AM

கங்கை நதியில் ஆய்வு செய்ய சென்ற பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பயணித்த படகு பாலத்தின் தூணில் மோதி விபத்துக்குள்ளானது.

பாட்னா அருகே கங்கை நதியில் கொண்டாடப்படவிருக்கும் சாத் பூஜையை முன்னிட்டு, நேரில் ஆய்வு செய்ய பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் படகில் சென்றனர்.

சாத் காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஜேபி சேது பாலத்தின் தூணில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக, படகில் பயணித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் காயமின்றி தப்பினர்.