கடலூர் அருகே தனியார் பேருந்தில் படிக்கருகே இருந்த இருக்கையில் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்ட நிலையில் தலைக்குப்புற கீழே விழுந்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வேகமாக சென்ற அந்த தனியார் பேருந்து நெல்லிகுப்பம் அருகே நின்றது.
ஓட்டுநர் சட்டென பிரேக் போட்ட நிலையில், கம்பி ஏதும் பிடிக்காமல் அமர்ந்திருந்த அந்த பெண் நிலை தடுமாறி குழந்தையுடன் படிக்கட்டின் வழியே கீழே விழுந்து காயமடைந்தார்.