திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கட்டிடப் பணிகளுக்காக குழி தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டு, பள்ளத்தில் சிக்கிய நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
வில்பட்டி பிரதான சாலையில் வீடு கட்டுமானப் பணிக்காக பில்லர் குழி தோண்டும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, திடீரென ஏற்பட்ட மண்சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து என்பவர் 10 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி மண் குவியல்களை அகற்றி அவரை மீட்டனர்.