பாகிஸ்தான் உலகின் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பதிலளித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் பேசிய ஜோ பைடன், எந்த வித ஒழுங்கமைவும் இன்றி, அணு ஆயுதங்களை கையாள பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்துள்ள இம்ரான்கான், அமெரிக்காவைப் போலல்லாமல், பாகிஸ்தானிடம் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளதாக தெரிவித்தார்.