நாகர்கோவிலில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் வெட்டுர்ணி மடத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயராம் என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவியை வழிமறித்து காதலிக்க கூறி அடித்தும் மிரட்டி உள்ளார்.
அந்த மாணவி காதலிக்க மறுத்ததால், அவரது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளான்.
புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் ரக்கடு பாய் ஜெயராமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.