கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த விபத்தின் காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பருத்திவிளை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், குளச்சல் அரசு மருத்துவமனை அருகே வாகனம் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.