துருக்கியின் பார்டின் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.
நேற்று மாலை சுரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்துக் கொண்டிருந்த போது வெடி விபத்து ஏற்பட்டு சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்தது.
இதில், சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்ட 11 பேர் வெளியேறிய நிலையில், சிலரை மீட்புக் குழுவினர் மீட்டனர். 300 முதல் 350 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் 50 தொழிலாளர்களை மீட்கும் பணி இரண்டாம் நாளாக தொடருகிறது.
சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்ததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.