​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவி சத்யஸ்ரீயை ரயில் முன் தள்ளி கொன்ற கொலையாளி சதீஷ்க்கு கூடுதல் பாதுகாப்பு

Published : Oct 15, 2022 11:20 AM

மாணவி சத்யஸ்ரீயை ரயில் முன் தள்ளி கொன்ற கொலையாளி சதீஷ்க்கு கூடுதல் பாதுகாப்பு

Oct 15, 2022 11:20 AM

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யஸ்ரீ யை ரயில் முன் தள்ளி படுகொலை செய்த சதீஷ்க்கு சிறைச்சாலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளி சதீஷை 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சத்யஸ்ரீ யை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ள திட்டமிட்டிருந்ததாக சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதால் இந்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சதீஷ்க்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சிறைச்சாலையில் சதீஷ் இரவு முழுவதும் உறங்காமல் புலம்பி கொண்டிருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.