தெலுங்கானா மாநிலத்தில் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 சவரன் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கம்மம் நகர் கமான் பஜாரில் உள்ள வீட்டில் சாரதா என்ற 67 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த ஒரு இளைஞன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டான்.