​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கைத் தமிழர் முகாமில் மதுபோதையில் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் 4பேர் கைது..!

Published : Oct 15, 2022 7:34 AM



இலங்கைத் தமிழர் முகாமில் மதுபோதையில் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் 4பேர் கைது..!

Oct 15, 2022 7:34 AM

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கைத் தமிழர் முகாமில் மதுபோதையில் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் 4பேர் கைது செய்யப்பட்டனர்.

கூலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்த  ராமு கடந்த 3ந் தேதி  பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமிற்கு சென்று அங்குள்ள மாந்தோப்பு என்ற இடத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு மது போதையில் இருந்த போது இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த 5பேருடன் வாய்த் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது நடந்த சண்டையில் ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் 4பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.