பாகிஸ்தான் நகரான முல்தானில் உள்ள மருத்துவமனையின் பிணவறை கூரை மீது சிதிலம் அடைந்து அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தகவல் அறிந்ததும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் சௌத்ரி குஜ்ஜார் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை நடத்தி காரணமானவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்க மாநில அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.