​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தர்மபுரி பெண் பத்மாவின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர கோரிக்கை

Published : Oct 15, 2022 7:02 AM

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தர்மபுரி பெண் பத்மாவின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர கோரிக்கை

Oct 15, 2022 7:02 AM

கேரளாவில்  நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவின் உடல்பாகங்களை சொந்த கிராமத்திற்கு  கொண்டுவர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மா கேரளாவில் கூலி வேலை மற்றும் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் அவரை உறவினர்கள் தொடர்பு கொண்ட போது செல்போன் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பத்மாவின் மகன் சந்தேகத்தின் பேரில் கேரள போலீசிடம் புகார் தெரிவித்ததின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பத்மா உயிரிழந்தது தெரிய வந்தது.