சண்டையிட்டு பெண் தோழியுடன் கடைக்கு சென்ற கணவன்.. தர்ம அடி கொடுத்த மனைவி..
Published : Oct 14, 2022 7:50 PM
சண்டையிட்டு பெண் தோழியுடன் கடைக்கு சென்ற கணவன்.. தர்ம அடி கொடுத்த மனைவி..
Oct 14, 2022 7:50 PM
உத்தரபிரதேச மாநிலத்தில், மனைவியுடன் சண்டையிட்டு பெண் தோழியுடன் கடைக்கு வந்த கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவி, இருவரையும் சரமாரியாக தாக்கிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
கர்வா சவுத் பண்டிகையை முன்னிட்டு, காசியாபாத் சந்தையில் பெண் தோழியுடன் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த கணவனை பார்த்த மனைவி, பொதுமக்கள் பலர் முன்னிலையில் அவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கினார். சமீபத்தில் கணவன் - மனைவி இருவரும் சண்டையிட்ட நிலையில், மனைவி அவரது தாயார் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், தாயாருடன் கடைக்கு வந்த பெண், கணவனை தோழியுடன் பார்த்தவுடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.