​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் இருந்த நெற்குவியல்கள் மீது கார் மோதி தடம்புரண்டு விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

Published : Jun 19, 2022 9:36 PM

சாலையில் இருந்த நெற்குவியல்கள் மீது கார் மோதி தடம்புரண்டு விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

Jun 19, 2022 9:36 PM

ஞ்சை அருகே சாலையில் இருந்த நெற்குவியல்கள் மீது கார் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மருங்குளம் -  திருக்கானூர்பட்டி சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமைந்துள்ளது. அதன் எதிரே சாலையில் விவசாயிகள் நேற்று நெல்லை கொட்டி காயவைத்த பின் கருப்பு நிற தார்ப்பாய் போட்டு மூடிவைத்துள்ளனர்.

அதிகாலையில் மதுக்கூர் வடசேரியில் இருந்து அவ்வழியாக வந்த கார் ஒன்று நெற்குவியல்கள் இருப்பதை அறியாமல் அவற்றின் மீது மோதி தடம்புரண்டுள்ளது.